ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2

October 28, 2014

உம்மை பிரிந்து வாழ முடியாதையா

உம்மை பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)  

1.  வானத்திலோ பாதாளத்திலோ
    எங்கே நான் தங்கினாலும்
    உமது கை என்னை நடத்தும்
    உம் வலக்கரம் என்னை பிடிக்கும்

2.  இருள் என்னை மூடினாலும்
    என்னை சுற்றி வெளிச்சமாயுள்ளீர்
    உமக்கு மறைவான அந்தகாரமேது
    இருளான சூழ்நிலையும் வெளிச்சமாகும்

3.  பிரமிக்கும் அதிசயமாய் உண்டாக்கி
    தாயின் கருவில் என்னை காத்தீர்
    உமது புஸ்தகத்தில் எழுதி வைத்து
    விசித்திர விநோதமாய் உருவாக்கினீர்

4.  மணலைப் பார்க்கிலும் அதிகமான
    ஆலோசனைகளை எனக்குத் தந்தீர்
    அருமையாய் என்னை நடத்துகிறீர்
    என்றும் உம்மண்டை நானிருப்பேன்

5. தேவனே என்னை ஆராய்ந்து
    என் சிந்தனைகளை அறிகின்றீர்
    வேதனை வழிகளை விட்டு விலக்கி
    நித்திய வழியிலே என்னை நடத்தும்.

-சாந்தி அசோக்
                         பாண்டிச்சேரி.


No comments:

Post a Comment