கடலில் மூழ்கும் போது தூக்கிய அன்பு!
செங்கடலை பிளந்து நடத்திய அன்பு!
நேற்றுமின்று மென்றும் மாறாத தேவன்பு!
தாவீதுக்கு ஆசீர்வாதம் தந்த பரிசுத்த அன்பு!
குறைவை நிறைவாக்கும் பரம தேவ அன்பு!
சாலமோனுக்கு ஞானம் தந்த ஞான அன்பு!
சவுலை பவுலாக மாற்றிய முன்குறித்த அன்பு!
அக்கினியில் வேகாமல்தானியேலை காத்த அன்பு!
மரித்த லாசருவை உயிரோடெழுப்பிய அற்புத அன்பு!
ஆகாரின் அழுகுரலை கேட்ட அரவணைக்கும் அன்பு!
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேறுதலின் அன்பு!
யோனாவை மீன் வயிற்றில் சுமந்த தீர்மான அன்பு!
மனதுருகி நினிவேயை மன்னித்த தயவான அன்பு!
எலியாவை சுழல்காற்றில் மறைத்த பரம அன்பு!
எலிசாவுக்கு இரு மடங்கு வல்லமை தந்த அன்பு!
கிதியோனின் ஜெபத்தைக் கேட்ட அதிகார அன்பு!
சூரியன் மறையாமல் நிற்க வைத்த அதிசய அன்பு!
எசேக்கியாவுக்கு பதினைந்து வருடம் கூட்டிதந்த அன்பு!
நாகமானின் குஷ்டம் நீக்கிய குணமாக்கும் அன்பு!
எரிகோவை துதியாலே விழச் செய்த துதியின் அன்பு!
பேதுருவை சிறையினின்று மீட்டெடுத்த மீட்பின் அன்பு!
ஸ்தேவானை விசுவாச வல்லமையால் நிறைத்த அன்பு!
அற்புத அடையாளங்கள் செய்ய வைத்த தேவனின் அன்பு!
-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி
No comments:
Post a Comment