தூதர்கள் புடைசூழ வருபவரே!
அதி சீக்கிரமாய் வருபவரே!
நடு வானத்தில் வந்து நிற்பவரே!
வாருமையா நல் போதகரே!
வந்தெம்மை அழைத்து செல்லுமே!
கண்ணிமைக்கும் நேரத்தில் வருபவரே!
கைகோர்த்து உம்மோடு வந்திடவே!
கவனமெல்லாம் உம்மேல் செலுத்தியே!
காத்திருக்கிறேன் உம் வருகைக்காக!
சடுதியாய் இங்கு வாருமையா!
சர்வசிருஷ்டிகரிடம் அழைத்துசெல்லுமே!
மேக ரதத்தை காணச் செய்யுமே!
எக்காள தொனியை கேட்கச் செய்யுமே!
அழைப்பின் குரலை உணரச் செய்யுமே!
மறுரூபமாக்கி அழைத்துச் செல்லுமே!
மணவாளரே உடன் வாருமையா!
மணவாட்டியை அழைத்துசெல்லுமே!
-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. ~ வெளி 22:12
ReplyDelete