ஆச்சர்யமான உம் வழிநடத்துதல் வேண்டுமே தேவா இந்த
தந்திரமான உலகினை நான் ஜெயித்திட
தேவாசீர்வாதம் என்னில் தங்க வேண்டுமே தேவா இந்த
மாயமான வாழ்வினை வெறுத்து ஒதுக்கிட
பரலோக பொக்கிஷங்களை பெற்றிட வேண்டுமே தேவா இந்த
அழியும் பூவுலகின் ஆஸ்திகளை தள்ளிட
உம்மோடு இன்னும் கிட்டிச்சேர வேண்டுமே தேவா இந்த
இயற்கையின் பேரழிவுகளினின்று தப்பிட
சிருஷ்டி கர்த்தாவின் ஞானம் வேண்டுமே தேவா இந்த
சிருஷ்டிப்புகளின் அறிவை மேற்கொண்டிட
மெய்ஞான கிறிஸ்தருளும் நீதியின்கனிகள் வேண்டுமே தேவா இந்த
கனியற்ற ஆத்துமாக்களின் மனம் திருப்பிட
அதிகாலை உம்மை போற்றி துதிக்க வேண்டுமே தேவா இந்த
நாளின்தேவ ஆலோசனையின்படி நடந்திட
-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி.
Very nice.God Bless You.
ReplyDelete