ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2

August 5, 2014

ஆச்சரியமான வழிநடத்துதல் வேண்டுமே

ஆச்சர்யமான உம் வழிநடத்துதல் வேண்டுமே தேவா இந்த
தந்திரமான உலகினை நான் ஜெயித்திட

தேவாசீர்வாதம் என்னில் தங்க வேண்டுமே தேவா இந்த
மாயமான வாழ்வினை வெறுத்து ஒதுக்கிட

பரலோக பொக்கிஷங்களை பெற்றிட வேண்டுமே தேவா இந்த
அழியும் பூவுலகின் ஆஸ்திகளை தள்ளிட

உம்மோடு இன்னும் கிட்டிச்சேர வேண்டுமே தேவா இந்த
இயற்கையின் பேரழிவுகளினின்று தப்பிட

சிருஷ்டி கர்த்தாவின் ஞானம் வேண்டுமே தேவா இந்த
சிருஷ்டிப்புகளின் அறிவை மேற்கொண்டிட

மெய்ஞான கிறிஸ்தருளும் நீதியின்கனிகள் வேண்டுமே தேவா இந்த
கனியற்ற ஆத்துமாக்களின் மனம் திருப்பிட

அதிகாலை உம்மை போற்றி துதிக்க வேண்டுமே தேவா இந்த
நாளின்தேவ ஆலோசனையின்படி நடந்திட

-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி.

1 comment: