வாருமையா போதகரே – எந்நாளும்
ஜெபிக்கும் ஜெபவீரனாக நான் வாழ்ந்திட
அருளுமையா உம்கிருபைகளை!
உலகில் ஜெயம்பெறச் செய்யும் ஜெபஜீவியமே – என்னை
சேனையதிபனின் செயல் வீரனாக்கிடும் ஜெபஜீவியமே!
உன்னத அனுபவம் தந்திடும் ஜெபஜீவியமே – என்னை
உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கும் ஜெபஜீவியமே!
வரங்களால் நிறைந்திடச் செய்யும் ஜெபஜீவியமே – என்னை
வற்றாத நீருற்றை காணச்செய்திடும் ஜெபஜீவியமே!
தள்ளாடாமல் பெலப்படுத்தும் ஜெபஜீவியமே – என்னை
தளராமல் முன்னேறச் செய்திடும் ஜெபஜீவியமே!
மரணத்தின் பிடியினின்று காக்கும் ஜெபஜீவியமே – என்னை
மாமன்னரை காணச்செய்திடும் ஜெபஜீவியமே!
பரவசம் அடைந்திடச்செய்யும் ஜெபஜீவியமே - நான்
பரமப்பிதாவை கண்டுகளிக்க வைக்கும் ஜெபஜீவியமே!
- சாந்தி அசோக்
பாண்டிச்சேரி
No comments:
Post a Comment