தேவாதி தேவனுக்கு நமஸ்காரம்
வானோர் தொழும் நாதனுக்கு நமஸ்காரம்
பரிசுத்தர் உபகாரனுக்கு நமஸ்காரம்
வறண்ட கானகம் போன்ற வாழ்வில்
வற்றாத நீரூற்றைக் காணச் செய்த
வான் புவி தேவனுக்கு நமஸ்காரம்
ஆளுதல் தேறுதலற்ற வாழ்வில்
யாரும் எடுக்க இயலா தேவன்பளித்த
தேற்றரவாளனுக்கு நமஸ்காரம்
கண்ணீரினால் நனைந்த என் படுக்கையை
அபிஷேக மழையினால் நிறையச் செய்த
அபிஷேக நாதருக்கு நமஸ்காரம்
வீண் வார்த்தைகளை அலப்பிய என் நாவை
துதிகள் செலுத்தும் கருவியாக மாற்றிய
திரித்துவ தேவனுக்கு நமஸ்காரம்
உலக சிந்தையில் உழன்ற இருதயத்தை
நற்சிந்தையோடு ஜெபிக்க வைத்த
ஜெகத்தின் ரட்சகனுக்கு நமஸ்காரம்.
- சாந்தி அசோக்
பாண்டிச்சேரி
No comments:
Post a Comment