இரட்சிப்பின்தேவன்தந்த விடுதலையே!
பாவ சாபத்தினின்று பெற்ற விடுதலையே!
பரலோகப்பாதை காட்டிய விடுதலையே!
வீணானதை பின்பற்றுவதிலிருந்து விடுதலையே!
வீணராக்கும்மாயையிலிருந்து விடுதலையே!
வீண்வார்த்தை பேசுவதிலிருந்து விடுதலையே!
விண்ணகத்தந்தை தயவாயளித்த விடுதலையே!
தீயவரோடுள்ள நட்பின்வழியினின்று விடுதலையே!
தீழ்ப்பானதினின்று பிரித்தெடுத்திட்ட விடுதலையே!
தீரா வியாதிகளை விட்டு விலக்கிய விடுதலையே!
தீதணுகாது நன்மையை ருசிக்கசெய்த விடுதலையே!
பரந்தாமனை அறிந்ததினால்அடைந்த விடுதலையே!
பாதையை மாற்றியமைத்த மாசற்ற விடுதலையே!
பாசமான இயேசு அன்போடு கொடுத்த விடுதலையே!
பார்போற்றும்வெற்றி வேந்தனீந்த விடுதலையே!
மதிகேடானதை செய்வதிலிருந்து விடுதலையே!
மாறுபாடான எண்ணங்களிலிருந்து விடுதலையே!
மனதின்வழியில்நடப்பதிலிருந்து விடுதலையே!
மகத்துவமானவர்அளித்த உன்னத விடுதலையே!
முறையற்ற முறுமுறுப்புகளினின்று விடுதலையே!
முறிந்திட செய்யும்கசப்புகளினின்று விடுதலையே!
முற்றுகையிட்ட சாத்தானிடமிருந்து விடுதலையே!
மூன்றாணிகளால்தொங்கியவரீந்த விடுதலையே!
தாறுமாறுகளை துரத்தி விட்டகற்றிய விடுதலையே!
தடம்புரளச்செய்யும்உணர்வினின்று விடுதலையே!
தாயன்போடு விசாரித்து நடத்துகின்ற விடுதலையே!
தரணியை சிருஷ்டித்த தகப்பனளித்த விடுதலையே!
துன்மார்க்கரின்ஆலோசனையினின்று விடுதலையே!
பாவிகளின்வழிகளில்நிற்பதிலிருந்து விடுதலையே!
பரியாசக்காரரோடு உட்காருவதிலிருந்து விடுதலையே!
தூசியைப்போல பறக்கடிப்பதிலிருந்து விடுதலையே!
தியங்குகிற இருதய நினைவிலிருந்து விடுதலையே!
பொய்யை பிணைக்கும்தீமையினின்று விடுதலையே!
துணிகரமான பாவம்செய்வதினின்று விடுதலையே!
தீயவரின்திசைதிருப்பும்வாழ்விலிருந்து விடுதலையே!
விலையின்றி விற்கப்பட்டு பணமின்றி மீட்கப்பட்ட விடுதலையே!
வெற்றி வேந்தன்இயேசுவின்இரத்தத்தால்பெற்ற விடுதலையே!
எவரும்எதிர்நிற்கவும்எதிர்பேசவும்கூடாத விடுதலையே!
இயேசுவின்வருகையில்கோதுமைமணியாக மாற்றிடும்விடுதலையே!
-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி
No comments:
Post a Comment