"Jesus said to his mother: "Woman, this is your son."Then he said to the disciple: "This is your mother."
யோவான்19:26,27அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
ஆண்டவராகிய இயேசு கல்வாரி சிலுவையில் பேசிய மூன்றாவது வார்த்தை
தாகம் தாகமென்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் என்ற பாடல் படி.ஆண்டவரின் கண்கள் அந்தப் பாடுகளின் மத்தியில் அந்தகேடு அடைந்து;உடலெல்லாம் காயங்கள்;சிரசிலே முள்முடியின் வேதனை மூன்று ஆணிகளில் தொங்கியவர் தேடுகின்றார்.
கண்டதோ அன்னை மரியாளின் பரிதவித்த நிலையில் சிலுவையண்டை, அருகே தன்மேல் மார்பில் சாய்ந்து உறவாடிய யோவனைத் தவிர தன் சீடர்கள் ஒருவரும் இல்லை.உடனே யோவான்19:26,27 லுள்ள படி கூறினார்.
- ஆண்டவர் பேதிருவுக்கு கூறியவை:
லூக்கா22:31,32,38
- ஆண்டவராகிய இயேசு தன் மரணத்தைப்பற்றி 3முறைகள் சீடருக்குக் கூறித்தேற்றுதல்
- சீடர்களைப் பற்றி கூறுதல்:
- மரணத்துக்குப் பின் அவர்கள் தேற்றப்படல்:
- வாக்குத் தத்தமுள்ள முதலாங் கர்பனை நிறைவேறுதல்:
நம் வாழ்வில் நம் பேற்றோரை நடத்துதல் ,பிதாவின் சித்தத்தையே நிறைவேற்ற வந்தேன் என்ற ஆண்டவர்
இயேசு மரணப்பரியந்தம் தன்னை தழ்த்தினார்.
- பெத்தானியாவிலுள்ள ஒரு வீட்டிற்கு உணவு அருந்த இயேசு போயிருந்தார்.லாசரு,மார்த்தாள்,மரியாள்.
நம்மை நாமே சோதனை செய்வோம்
நாம் மேற்கண்ட மூவரில் யாரைப் போலிருக்கிறோம்
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். லூக்கா10:42
2 தீமோத்தேயு3:12
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
நமக்கு ஆவியிலும்,ஆத்துமாவிலும் ,சரீரத்திலும் பிசாசானவன் போராட்டத்தையும்,பலவீனத்தையும் கொண்டு வருவான்.விசுவாசத்தை கெடுப்பதுவே அவன் வேலை.ஆனால் இந்த உலகிலிருப்பவனை விட எங்களுக்குளிருக்கும் தேவன் பெரியவர் என்று கர்த்தரை மகிமைப் படுத்துவோம்.விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
எபிரெயர்2:18:
அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
1பேதுரு5:10
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
மனப்பாட வசனம்:
யோவான்14:23
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
Shared by Sis.Annal
3-27-2015
No comments:
Post a Comment