ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2

July 18, 2014

பரிசுத்த ஸ்தலத்தில்பிரவேசிப்பதற்காக தகுதிகள்இரண்டு

எபி-10-19,20 – ”ஆகையால் சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு, இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணின படியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்”.

நாம்பரிசுத்தஸ்தலத்தில்பிரவேசிப்பதற்கு இயேசுவானவர்,

தமது மாம்சமாகிய திரையின்வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணியிருக்கிறார்.
அந்த மார்க்கத்தின் வழியாய் பிரவேசிப்பதற்கு இயேசுவுடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியத்தை உண்டாக்கியிருக்கிறார்.

இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள், பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்படியாக, இயேசுகிறிஸ்து தமது மாம்சத்தை, ஒருமூடியிருக்கிற திரையைப் போலாக்கி, தமது மாம்சத்தை ஒரு வழியைப் போலாக்கி, அந்த திரையின் வழியாகப் பிரவேசித்து, பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும் பாக்கியத்தை விசுவாசிகளுக்கு கிருபையாக தந்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்துவின் மாம்சமான திரையின் வழியே நுழைகிறவர்களுக்கு, விசுவாசத்தை அளிக்கும்படியாக இரண்டு கிருபைகளை வைத்திருக்கிறார். முதலாவதாக புதியதானதும், இரண்டாவதாக ஜீவனைத் தருகிறதுமான ஒருமார்க்கத்தை உண்டு பண்ணி வைத்திருக்கிறார். (மார்க்கம்என்றால்வழி) எப்பொழுதும், ஒரு புதிய காரியத்தை செய்யும்போது, எல்லோருக்கும் ஒரு தயக்கம், தடுமாற்றம்உண்டாவது சகஜமான ஒன்று. அதுபோல, இந்த புதிதானதும், ஜீவனுமான மார்க்கத்திற்குள் எப்படி நுழைவது என்று தயங்குபவர்களுக்கு, இயேசுகிறிஸ்து, தமது இரத்தத்தினாலே உண்டாகிற தைரியத்தை கொடுக்கிறவராக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணியிருக்கிறார். இயேசுவுடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியத்தை உண்டாக்கியிருக்கிறார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்திலே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதானஆசாரியன் மாத்திரமே வருடத்திற்கு ஒருமுறை மிகுந்த பரிசுத்தத்தோடும், நடுக்கத்தோடும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஏந்திக் கொண்டு செல்ல முடிகிறதாக இருந்தது.

ஆனால் புதிய ஏற்பாட்டுக்கால விசுவாசிகளாகிய நமக்கோ, தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய வேண்டுமானால், இயேசுகிறிஸ்துவின் மாம்சமும், இயேசுகிறிஸ்துவின் இரத்தமும், வழியாகவும், தைரியமாகவும் இருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

இயேசுகிறிஸ்துவின் மாம்சத்திற்கும், இரத்தத்திற்கும் உரியவர்களாக நம்மை தெரிந்து கொண்டு தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி செலுத்துவோம்.

அனுதினமும், இயேசுகிறிஸ்துவின் மாம்சத்தையும், இரத்தத்தையும், உரிமை பாராட்டி, தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும் தகுதியையும், தைரியத்தையும்பெற்றுக்கொள்ளுவோம்.

அந்தத் தகுதியை இயேசுகிறிஸ்துவின் வருகை பரியந்தம் இழந்து விடாதிருப்போம்.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!

-சாந்தி அசோக்
பாண்டிச்சேரி

No comments:

Post a Comment